பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய பயங்கரவாதிகள் - தேடுதல் பணி தீவிரம்


பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய பயங்கரவாதிகள் - தேடுதல் பணி தீவிரம்
x

பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் ராஜ்புரா பகுதியில் இன்று மதியம் 12.40 மணியளவில் சிஆர்பிஎப் பாதுகாப்பு படை வீரர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை வீரர் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story