உ.பி. ரெயில் விபத்து - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு


உ.பி. ரெயில் விபத்து - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
x

உத்தரபிரதேசத்தில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்தனர்.

லக்னோ,

சண்டிகரில் இருந்து அசாமின் திப்ரூகர் செல்லும் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று பிற்பகல் 2 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 60 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மற்றும் சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதைய சிஆர்எஸ் விசாரணையுடன் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகளின் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story