இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - இருவர் கைது


இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - இருவர் கைது
x

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தை கடத்த முயன்ற இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

புதுடெல்லி,

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தை கடத்த முயன்ற இருவரை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 15-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் துபாயில் இருந்த டெல்லி வந்த பயணிகள் இருவரை சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவர்களிடமிருந்து 2076.38 கிராம் எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1,01,59,934 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது சுங்கச் சட்டம், 1962-ன் பிரிவு 104-ன் படி வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story