அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மீது வழக்கு


அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக  சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மீது வழக்கு
x

அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் ஊர்வலமாக சென்று ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சுவரில் 'பே-சி.எம்.' போஸ்டர்களை ஒட்டினர்.

இதனால் அவர்களை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஊர்வலம் சென்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது பெங்களூரு ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story