ஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைப்பு


ஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைப்பு
x

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஜிப்மர் ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

அதன்படி, ஏப்ரல் 1 முதல் மொத்தம் 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ரூ. 500 முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story