ராஜஸ்தான்: கல்லூரி மாணவர் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை


ராஜஸ்தான்: கல்லூரி மாணவர் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
x

கல்லூரி முதலாமாண்டு படித்து வந்த மாணவர் விடுதியின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஜெய்ப்பூர்,

அரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மயங்க்(வயது 18). இவர் ராஜஸ்தானின் பக்வாரா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வந்தார். அங்குள்ள ஒரு ஆண்கள் விடுதியில் மயங்க் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு, விடுதியின் 10-வது மாடியில் இருந்து குதித்து மயங்க் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மயங்க்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இன்று காலை மயங்க்கின் உடலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story