மும்பை: பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை


மும்பை: பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை
x

பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்டபோதிலும் வாலிபருக்கு 3½ ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பையை சேர்ந்த 31 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகி வந்தார். நாளடைவில் காதலாக மாறியது. பெண்ணை திருமணம் செய்வதாக வாலிபர் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண்ணை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடந்தது.

இதன்பின்னர் வாலிபர் திருமணத்திற்கு மறுத்ததால் பாதிக்கப்பட்ட இளம்பெண் பெற்றோரிடம் கூறி அழுதார். பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கு விசாரணை காலத்தில் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இளம்பெண்ணிற்கு குழந்தையும் பிறந்தது.

இதற்கு மத்தியில் விசாரணை நிறைவில், அவர் மீதான பலாத்கார குற்றம் நிரூபணமானது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும் அவர் செய்த குற்றத்தை மறுக்க முடியாது எனக்கூறிய நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட வாலிபருக்கு 3½ ஆண்டு கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பு அளித்தார்.


Next Story