மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் முன்னிலை


மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் முன்னிலை
x

உத்தரபிரதேசத்தின் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் முன்னிலையில் உள்ளார்.

மெயின்புரி,

சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உத்தரபிரதேசத்தின் மெயின்புரி மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் அவர் மறைந்ததால், அந்த தொகுதி காலியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் முலாயமின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட்டார். பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் எம்.பி. ரகுராஜ் சிங் ஷாக்யா போட்டியிட்டார்.

இந்த நிலையில், மெயின்புரி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் 16 ஆயிரத்து 933 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதே போல், ராம்புர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் சமாஜ்வாடி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.


Next Story