எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 3 பேர் உடல்நசுங்கி பலி - தண்டவாளத்தில் நடந்து சென்றபோது விபரீதம்


எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 3 பேர் உடல்நசுங்கி பலி - தண்டவாளத்தில் நடந்து சென்றபோது விபரீதம்
x

தண்டவாளத்தில் நடந்து சென்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய சம்பவத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி என 3 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் விக்ரம் நகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 2 பெண்கள், சிறுமி என மொத்தம் 3 பேர் நேற்று நடந்து சென்றனர்.

அப்போது, மும்பையில் இருந்து கோலாப்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 3 பேர் மீதும் அதிவேகமாக மோதியது.

இந்த சம்பவத்தில் 3 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதியதில் 3 பேரின் உடல்களும் அடையாளம் தெரியாமல் நசுங்கியதால் உயிரிழந்தவர்கள் யார்? 3 பேரும் தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது விபத்தா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story