கார்கில் வெற்றி தினம் : நாட்டை காக்க உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் - ஜனாதிபதி முர்மு


கார்கில் வெற்றி தினம் : நாட்டை காக்க உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் - ஜனாதிபதி முர்மு
x

நாட்டை காக்க உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

லடாக்கின்,கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த இந்தியப் பகுதியில் உள்ள மலை உச்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான் படைகளை எதிர்த்து போரிட்டு 1999 ஜூலை 26-ல் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.இந்த வெற்றியை நினைவுகூரும் வகையிலும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையிலும், கார்கில் விஜய் திவாஸ் தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது

இந்த நிலையில் நாட்டை காக்க உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

கார்கில் விஜய் திவாஸ் நமது ராணுவத்தின் வீரத்திற்கான சின்னம். நாட்டை காக்க உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்.அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நாட்டு மக்கள் அனைவரும் எப்போதும் கடமைப்பட்டிருப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.


Next Story