ஜனநாயக உரிமைக்கு உத்தரவாதம் இல்லாத வரை காஷ்மீர் வளர்ச்சிபெறாது - பரூக் அப்துல்லா


ஜனநாயக உரிமைக்கு உத்தரவாதம் இல்லாத வரை காஷ்மீர் வளர்ச்சிபெறாது - பரூக் அப்துல்லா
x

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாத வரை காஷ்மீர் வளர்ச்சிபெறாது என்று பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

ஸ்ரீநகர்,

சர்வதேச மனித உரிமை தினம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியதாவது, மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதமும், மரியாதை அளிக்கப்படாதபோது ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சிபெறாது. உண்மை நிலைக்கு புறம்பாக கட்டுக்கதைகளை அமைத்து ஆளும் அரசு காஷ்மீரை அரசியல் ஏணியாக தேசிய அளவில் பயன்படுத்துகிறது' என்றார்.


Next Story