இன்றிரவு தோன்றும் "ஸ்ட்ராபெரி சூப்பர் மூன்" இந்தியாவில் தெரியுமா?


இன்றிரவு தோன்றும் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் இந்தியாவில் தெரியுமா?
x
தினத்தந்தி 14 Jun 2022 9:24 AM GMT (Updated: 14 Jun 2022 9:25 AM GMT)

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் தெரிய உள்ளது.

புதுடெல்லி,

2022ஆம் ஆண்டில் வானில் பல அறிய நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. ரெட் மூன் உள்பட அடுத்தடுத்து நிகழ்வுகள் ஏற்பட்டன. இந்த நிலையில் தற்போது ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் நிகழ்வு வானில் தோன்ற உள்ளது.

சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்த அழகான வானியல் நிகழ்வை ஏற்படுத்தும். நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது இந்த அரிய நிகழ்வு நடப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தியாவில் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் தெரியாது என்றும், எனினும் பொதுமக்கள் இதனை இணையத்தின் வாயிலாக காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவு வானில் தெரியும் என கூறப்படுகிறது. ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் நிகழ்வின்போது வானத்தில் உள்ள முழு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் என்றால், பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு குறைவாக இருக்கும்போது நிலவின் அளவு புவியில் இருந்து சற்று பெரிதாக தோன்றும். இச்சமயத்தில் ஏற்படும் பௌர்ணமி நிலவு வழக்கத்தைவிட மிகப் பெரிதாக இருக்கும். இதுவே "சூப்பர் மூன்". தற்போதும் இதே நிகழ்வு தான் நிகழவுள்ளது. ஆனால் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது அந்த சூப்பர்மூன் "இளஞ்சிவப்பு" நிறத்தில் ஒளிரும். இதைத்தான் "ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்" என்று அழைக்கின்றனர்.


Next Story