எப்போது கல்யாணம் என அடிக்கடி கேட்டு நச்சரித்த பக்கத்துவீட்டுக்காரரை அடித்துக்கொன்ற நபர்


எப்போது கல்யாணம் என அடிக்கடி கேட்டு நச்சரித்த பக்கத்துவீட்டுக்காரரை அடித்துக்கொன்ற நபர்
x

ஓய்வுபெற்ற அரசு முதியவர், திருமணம் தொடர்பான கேள்வியை தொடர்ந்து கேட்டு வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் சிரேகர்.

ஜகார்த்தா,

எப்போது கல்யாணம் என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வாழ்ந்து வந்தார்.

இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் மீது கொண்ட அக்கறையின் காரணமாக அவரைப் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் எப்போது திருமணம் செய்து கொள்ளபோகிறாய்?, 45 வயதாகியும் ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாய்? என்று கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த மாதம் 29 ம் தேதி திங்கள்கிழமையன்று முதியவரின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.

முதியவரின் மனைவியின் முன்னிலையிலேயே அவரை கட்டையால் சரமாறியாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து சிரேகரைத் தடுத்து நிறுத்தி முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிரேகரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்ததால் தான் மனதவளவில் பாதிக்கப்பட்டு முதியவரைத் தாக்கியதாக சிரேகர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.


Next Story