இந்தியா கூட்டணி கட்சி தலைவரின் தந்தை படுகொலை - அதிர்ச்சி சம்பவம்


இந்தியா கூட்டணி கட்சி தலைவரின் தந்தை படுகொலை - அதிர்ச்சி சம்பவம்
x

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவரின் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்சி விகாசில் இன்சென் கட்சி. இக்கட்சியின் தலைவர் முகேஷ் சஹனி. இவர் பீகார் அரசில் மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். அதேவேளை, முகேஷ் சஹனியின் விகாசில் இன்சென் கட்சி, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

இதனிடையே, முகேஷ் சஹனியின் தந்தை ஜிதன் சஹனி. இவர் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள பூர்வீக வீட்டில் தனியே வசித்து வருகிறார். அந்த வீட்டின் அருகே முகேஷ் சஹனி வசித்து வருகிறார்.

இந்நிலையில், முகேஷ் சஹனி வீட்டிற்குள் நேற்று இரவு நுழைந்த மர்ம நபர்கள் அவரை படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இன்று காலை தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட முகேஷ் சஹனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முகேஷ் சஹனியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவரின் தந்தை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story