பயணிகள் போராட்டம் எதிரொலி ; மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் ரத்து


பயணிகள் போராட்டம் எதிரொலி ; மும்பையில்  ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் ரத்து
x

பயணிகள் போராட்டத்தை அடுத்து புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 10 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வேயில் கடந்த 19-ந் தேதி 10 புதிய ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சாதாரண மின்சார ரெயில்களுக்கு பதிலாக இந்த ஏ.சி. மின்சார ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. எனவே புதிய ஏ.சி. ரெயில் சேவைகளுக்கு எதிராக பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மீண்டும் சாதாரண மின்சார ரெயில்களை இயக்குமாறு வலியுறுத்தினர். இதேபோல அரசியல் தலைவர்களும் மீண்டும் சாதாரண ரெயில்களை இயக்குமாறு வலியுறுத்தினர்.

இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி முதல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 10 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலில் புதிய ஏ.சி. ரெயில்கள் இயக்கப்பட்ட நேரத்தில் ஏற்கனவே இருந்தது போல சாதாரண மின்சார ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளது. மத்திய ரெயில்வே சாதாரண மின்சார ரெயில்களுக்கு பதிலாக ஏ.சி. மின்சார ரெயில் சேவையை அறிமுகம் செய்வதை விட்டு, புதிய நேரத்தில் ஏ.சி. மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story