இரண்டு கூட்டாளிகளின் உதவியுடன் மாமியார் வீட்டில் கொள்ளையடித்த மருமகள்


இரண்டு கூட்டாளிகளின் உதவியுடன் மாமியார் வீட்டில் கொள்ளையடித்த மருமகள்
x

சமீபத்தில் திருமணமான இளம்பெண் தனது மாமியார் வீட்டில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

பக்வாரா,

பஞ்சாபில் சமீபத்தில் திருமணமான இளம்பெண் ஒருவர் தனது மாமியார் வீட்டில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை இரண்டு இளைஞர்களின் உதவியுடன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த வரீந்தர் மிஸ்ரா, என்பவரின் வீட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வரீந்தர் மிஸ்ராவின் இளைய மகனுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது. இருவரும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் இளைய மகனின் மனைவி நேற்று இரண்டு இளைஞர்களின் உதவியுடன் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

நேற்று வரீந்தர் மிஸ்ராவின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த இரண்டு இளைஞர்கள், அவரது மூத்த மருமகள் அஞ்சு மிஸ்ரா மற்றும் அவரது இரண்டரை வயது மகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை மற்றும் பணத்தை கேட்டுள்ளனர். அஞ்சுவையும் அவரது மகனையும் ஒரு அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு நகைகள் மற்றும் பணத்துடன் குற்றம் சாட்டப்பட்ட பெண் இளைஞர்களுடன் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தின் போது அஞ்சு வீட்டில் தனியாக இருந்ததை சாதகமாக பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்ட பெண் அவர்கள் இருவரையும் திட்டத்தை செயல்படுத்த அழைத்ததாக போலீசார் தெரிவித்தனர். மூவரும் ஆட்டோவில் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பக்கத்து வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளின் மூலம் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story