கரக்பூர் ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு


கரக்பூர் ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு
x

கரக்பூர் ஐ.ஐ.டி. கல்லூரி விடுதியில் கேரள மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கரக்பூரில் இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.) உள்ளது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த தீபிகா (வயது 21) 3ம் ஆண்டு பயொடெக்னாலஜி படிப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில், மாணவி தீபிகா கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். கல்லூரி விடுதி வளாகத்தின் மாடியில் உள்ள அறையில் தீபிகா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story