டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானத்தின் கழிவறையில் இருந்து ரூ.1.95 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்


டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானத்தின் கழிவறையில் இருந்து ரூ.1.95 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 5 March 2023 11:29 AM GMT (Updated: 5 March 2023 11:32 AM GMT)

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தின் கழிவறையில் இருந்து ரூ.1.95 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமானத்தின் கழிவறையில் இருந்து ரூ.1.95 கோடி மதிப்புள்ள நான்கு தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல் அடுத்தடுத்த உள்நாட்டு பயணங்களை முடித்துவிட்டு நின்று கொண்டிருந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது, சுங்கத்துறை அதிகாரிகள், விமானத்தின் கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த தொட்டியின் கீழே சாம்பல் நிற பை ஒன்று இருப்பதை கண்டறிந்தனர். அந்த பையில் 3969 கிராம் எடையுள்ள நான்கு தங்கக் கட்டிகள் இருந்தன. அதை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story