ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்


ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்
x

ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதிய விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288- ஆக உயர்ந்துள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசாவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த ரயில் விபத்தில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 747- பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதில் 56 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.


Next Story