புதிதாக 120 பேருக்கு கொரோனா: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு


புதிதாக 120 பேருக்கு கொரோனா: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
x

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 2-வது நாளாக அதிகரித்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 142 ஆக அதிகரித்தது. இருப்பினும், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 120 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரத்து 37 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோயின் பிடியில் இருந்து 24 மணி நேரத்தில் 103 பேர் குணமடைந்தனர். இதுவரை தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 360 ஆக அதிகரித்தது.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 2-வது நாளாக அதிகரித்தது. இதில் 17 அதிகரித்தது. தற்போது, 1,916 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் 3 பேர் பலியானார்கள். நேற்று புதிய உயிரிழப்பு இல்லை. கேரளாவில், விடுபட்ட ஒரு மரணத்தை கணக்கில் சேர்த்தனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 761 ஆக உயர்ந்தது.


Next Story