'மக்களின் முதல்-மந்திரி' - சித்தராமையாவுக்கு எடியூரப்பா திடீர் பாராட்டு


மக்களின் முதல்-மந்திரி - சித்தராமையாவுக்கு எடியூரப்பா திடீர் பாராட்டு
x

மைசூருவில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே மேடையில் சித்தராமையாவும், எடியூரப்பாவும் பங்கேற்றனர்.

மைசூரு,

கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் தொகுதி பா.ஜனதாவை சேர்ந்த சீனிவாச பிரசாத் எம்.பி. கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் மைசூரு மண்டலத்தில் தலித் சமூகத்தின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மைசூருவில் நேற்று நடைபெற்றது.இதில் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ள முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

இதில் எடியூரப்பா பேசும்போது, 'முதல்-மந்திரி சித்தராமையாவை 'ஜனபிரிய' (மக்கள் நேசிக்கும்) முதல்-மந்திரி என்று கூறி அவரை புகழ்ந்து பேசினார். அவர்கள் அரசியல், கொள்கைகள் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நண்பர்களாக உள்ளனர். எடியூரப்பாவின் பேச்சு அங்கு கூடியிருந்த சித்த ராமையாவின் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியது.


Next Story