சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்


டெல்லி மாநகராட்சி கூட்டம், பாஜக ஆர்ப்பாட்டம்
x

டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து தன்னை தாக்கியதாக அக்கட்சியின் பெண் எம்.பி. சுவாதி மாலிவால் நேற்று டெல்லி போலீசிடம் முறையிட்டார். இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

அப்போது பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்டியலின மேயரை நியமிக்கக் கோரியும் முதல்- மந்திரி கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


Next Story