சாலையில் குப்பையை கொண்டுவந்து போட்ட தெருநாயை அடித்துக் கொன்ற தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு!


சாலையில் குப்பையை கொண்டுவந்து போட்ட தெருநாயை அடித்துக் கொன்ற தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு!
x

மராட்டிய மாநிலத்தில் தெருநாயை அடித்துக் கொன்ற நபர் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தானே,

மராட்டிய மாநிலத்தில் தெருநாயை அடித்துக் கொன்ற நபர் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமையன்று இரவு உல்ஹாஸ்நகர் டவுன்ஷிப் பகுதியில் தெருவோர நாய் ஒன்று குப்பைகளை கொண்டுவந்து போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குப்பை கொட்டியதற்காக அந்த நாயை அந்த நபர் குச்சியால் தாக்கினார்.

அதை தொடர்ந்து, அவரது மகனும் கடந்த சனிக்கிழமையன்று நாயை குச்சியால் அடித்து துன்புறுத்தினார். அதைத் தொடர்ந்து அந்த நாய் மயங்கி விழுந்து இறந்தது.

அவர்களை அக்கம்பக்கத்தினர் தடுக்க முயன்றும் பலனில்லை. இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

பின்னர், சில விலங்கு நல ஆர்வலர்கள் உள்ளூர் போலீசாரை அணுகி புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து, போலீசார் அந்த நபர் மற்றும் அவரது மகன் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.எனினும் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.


Next Story