புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்...!


புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்...!
x

இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் தொட்டுள்ளது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த மாதம் செப்டம்பர் முதல் அக்டோபர் இறுதி வரை இறங்குமுகமாக இருந்தது. அதன்பின்னர், நவம்பர் தொடக்கம் முதல் பங்குச்சந்தை மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏறுமுகத்திலேயே உள்ளன. அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தல், சர்வதேச பங்குச்சந்தைகளின் சாதக நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தில் உள்ளன.

இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சம் தொட்டுள்ளன. 4 மாநில தேர்தலில் பாஜக 3 மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியதும் புதிய உச்சம் பெற்றுள்ளது.

அதன்படி, நிப்டி சுமார் 300 புள்ளிகள் அதிகரித்து 20 ஆயிரத்து 602 என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது. பேங் நிப்டி சுமார் 1 ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து 45 ஆயிரத்து 821 புள்ளிகளை தொட்டுள்ளது. சென்செக்ஸ் 1 ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து 68 ஆயிரத்து 587 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது.

பின் நிப்டி சுமார் 430 புள்ளிகள் அதிகரித்து 20 ஆயிரத்து 655 புள்ளிகளை தொட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story