நாடு முழுவதும் 5 ஜி சேவை எப்போது? ஏர்டெல் நிறுவனம் தகவல்


நாடு முழுவதும்  5 ஜி சேவை எப்போது? ஏர்டெல் நிறுவனம் தகவல்
x

வரும் 2024- ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 5 ஜி இணைய சேவையை நாடு முழுவதும் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி இணைய சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி 5 ஜிசேவையை இந்தியாவில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல் கூறியதாவது;

4 மெட்ரோ நகரங்கள் உள்பட8 நகரங்களில் 5 ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் பெரும்பாலன பகுதிகளில் 5 ஜி சேவை கிடைக்கும். 2024- ஆம் ஆண்டு மார்ச் மாததிற்குள் நாடு முழுவதும் 5 ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கும்' என்றார்.


Next Story