ராஜஸ்தானில் புலிகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது.. முதல்-மந்திரி அசோக் கெலாட்


ராஜஸ்தானில் புலிகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது.. முதல்-மந்திரி அசோக் கெலாட்
x
தினத்தந்தி 15 Sep 2022 12:02 AM GMT (Updated: 15 Sep 2022 12:03 AM GMT)

வனவிலங்கு பாதுகாப்பில் மாநில அரசின் முயற்சியால் ராஜஸ்தானில் புலிகளின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளதாக முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்தார்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் நேற்று மாநில வனவிலங்கு வாரியக் கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

வனவிலங்கு பாதுகாப்பில் மாநில அரசின் முயற்சியால் ராஜஸ்தானில் புலிகளின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. சிறுத்தை, சிட்டல், மான், கர்மோர் உள்ளிட்ட பிற வன விலங்குகளின் எண்ணிக்கையும் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. "வனவிலங்கு பாதுகாப்பு எங்கள் முதன்மையான முன்னுரிமை" என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் அக்டோபர் 2-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் வன உயிரின வார விழா நடத்தப்படும். காடுகள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக, வனவிலங்கு ஆர்வலர்கள், நிபுணர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புடன் தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து அரசு செயல்பட்டு வருகிறது.

சாம்பார் ஏரி சதுப்பு நிலப் பாதுகாப்பிற்காக சட்டவிரோத குழாய் கிணறுகளை அகற்றவும், மாநிலம் முழுவதும் உள்ள மற்ற பகுதிகளில் சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் பணியை விரைவுபடுத்தவும் முதல்-மந்திரி உத்தரவிட்டார்.


Next Story