திருவனந்தபுரத்தில் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி


திருவனந்தபுரத்தில் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி
x

அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும்போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உடலுக்குள் சென்று மூளையை தாக்கின்றன.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் 4 பேர் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் கன்னரவிளையை சேர்ந்த அகில் (26) என்பவர் கடந்த மாதம் 23ம் தேதி அமீபிக் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தார். இதையடுத்து அகிலுடன் குளத்தில் குளிக்க சென்ற அவருடைய நண்பர்கள் 4 பேருக்கும் மூளை காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட பரிசோதனையில் அவர்களில் ஒருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மூவரின் பரிசோதனையில் மூவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தேங்கி நிற்கும் நீர்நிலைகளில், குறிப்பாக பாசிகள் வளர்ந்துள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்குமாறு அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story