கெஜ்ரிவாலின் அரசியல் அந்தஸ்து வளர்வதை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்- ஆம் ஆத்மி எம்.பி. பேச்சு


கெஜ்ரிவாலின் அரசியல் அந்தஸ்து வளர்வதை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்- ஆம் ஆத்மி எம்.பி. பேச்சு
x

Image Courtesy: PTI 

நாட்டு மக்கள் மோடிக்கு மாற்றாக கெஜ்ரிவாலைக் கருதத் தொடங்கி உள்ளதாக ராகவ் சதா தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மனிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

துணை முதல்வர் சிஷோடியா வீட்டில் சிபிஐ இன்று ரெய்டு நடத்தி உள்ளது. அதில் அவர்களுக்கு பென்சிலும், ஜாமென்டரி பாக்ஸும்தான் கிடைக்கும்.

பஞ்சாபில் இந்த ஆண்டு ஆம் ஆத்மி பெரும்பான்மை ஆட்சியை அமைத்த பிறகு, நாட்டு மக்கள் மோடிக்கு மாற்றாக கெஜ்ரிவாலைக் கருதத் தொடங்கி உள்ளனர். கெஜ்ரிவாலின் அரசியல் அந்தஸ்து வளர்ந்து வருவதால் பாஜகவும் மோடியும் பயப்படுகிறார்கள்.

கெஜ்ரிவாலின் புகழ் மற்றும் மக்கள் ஆதரவு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்று அடைந்து உள்ளது. இதனால் மக்கள் கெஜ்ரிவால் ஆட்சியைப் பற்றி பேசுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story