5 ஆண்டுகள், 3 மரணங்கள்... பாலியல் வழக்கில் வழக்கம்போல் ஆறுதல்: மத்திய பிரதேசத்தில் அவலம்


5 ஆண்டுகள், 3 மரணங்கள்... பாலியல் வழக்கில் வழக்கம்போல் ஆறுதல்: மத்திய பிரதேசத்தில் அவலம்
x

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை, மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் இன்று நேரில் சந்தித்து, பாரபட்சமற்ற விசாரணை நடக்கும். அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என ஆறுதல் கூறினார்.

சாகர்,

மத்திய பிரதேசத்தின் சாகர் நகரில் பரோடியா நைனாகிர் கிராமத்தில் வசித்து வந்த 20 வயது இளம்பெண் சஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2019-ம் ஆண்டு 15 வயது சிறுமியாக இருக்கும்போது அந்த பகுதியை சேர்ந்த 4 பேர் சஞ்சனாவை பின்தொடர்ந்து, கிண்டல் செய்துள்ளனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், ஆசாத் தாக்குர், விஷால் தாக்குர், புஷ்பேந்திர தாக்குர் மற்றும் சோட்டு ரெய்க்வார் ஆகிய 4 பேருக்கு எதிராக சஞ்சனா போலீசில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், 4 பேரும் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டனர் என தெரிவித்து இருக்கிறார். இதன்பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு சோதனை ஆரம்பித்தது.

இதில், போலீசிடம் புகார் அளிக்க கூடாது என கூறி விஷால் தாக்குர் அந்த சிறுமியை கன்னத்தில் அறைந்து, மிரட்டி இருக்கிறார். இந்த புகாரை தொடர்ந்து, 4 பேருக்கு எதிராக குற்ற வழக்கு பதிவானது. இந்த விசயத்தில், தொடர்ந்து இளம்பெண் மிரட்டப்பட்டார்.

இதன் ஒரு பகுதியாக இளம்பெண்ணின் 18 வயது சகோதரன் நிதின் அஹிர்வார் 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் அடித்து கொல்லப்பட்டார். இதற்கு சாட்சியாக இருந்த இளம்பெண்ணின் மாமாவை சமரச பேச்சுக்கு வரும்படி அழைத்து கடந்த சனிக்கிழமை தாக்கி, படுகொலை செய்தனர்.

அவருடைய உடலை எடுத்து கொண்டு, சொந்த கிராமத்திற்கு திரும்பும்போது, ஆம்புலன்சில் இருந்து அந்த இளம்பெண் கீழே குதித்து உயிரிழந்து உள்ளார். எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு துணை நிற்கும். பாரபட்சமற்ற விசாரணை நடக்கும். இதுபோன்ற சோக சம்பவங்களில் எல்லாம் காங்கிரஸ் அரசியல் செய்ய கூடாது என நான் கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அவர்களுக்கு இடையேயான பழைய பகைமையால், இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்க அரசு முயற்சி செய்யும். புறக்காவல் நிலையம் ஒன்று இந்த பகுதியில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதுபற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், சட்டத்தின் ஆட்சிக்கு நரேந்திர மோடி முடிவு கட்டி விட்டார். இந்த குடும்பத்திற்கு பா.ஜ.க. தலைவர்கள் செய்த விசயங்கள் மனதில் வலியும், கோபமும் ஏற்படுத்துகிறது.

பா.ஜ.க. ஆட்சியின் கீழ், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பதிலாக, குற்றவாளிகளுக்கே எப்போதும் அரசு துணை நிற்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன் காங்கிரஸ் கட்சி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், பா.ஜ.க. தலைவர்கள் முதலில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து, பின்னர் வெளியில் தெரிவிக்க கூடாது என தொடர்ந்து மிரட்டி வந்தனர். பயந்து போன அந்த சிறுமி, குடும்பத்தினரிடம் தெரிவித்து, நிறைய முயற்சிகளுக்கு பின் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

இதன்பின்பும் அவருடைய குடும்பத்தினரிடம் சமரசம் செய்வதற்காக பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க தொடங்கினர். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, சிறுமியின் சகோதரர் அடித்து கொல்லப்பட்டார். தடுக்க வந்த சிறுமியின் தாயார் நிர்வாணப்படுத்தப்பட்டார். தலித் சிறுமியின் சகோதரன் மரணத்திற்கு பின்னர் பா.ஜ.க. தலைவர்கள் சமரசம் செய்வதற்காக நிறைய நெருக்கடி கொடுத்து வந்தனர். 3 நாட்களுக்கு முன் சமரசம் என்ற பெயரில் சிறுமியின் மாமாவை அழைத்து பேசியபோது, அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அவருடைய உடலை கிராமத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து வரும்போது, வழியில் ஆம்புலன்சில் இருந்து விழுந்து அந்த சிறுமி உயிரிழந்து விட்டார் என செய்தி வந்துள்ளது என அதில் தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்து, 5 ஆண்டுகளாகியும் தீர்வு காணப்படாமல் ஒரே குடும்பத்தில், புகார் அளித்த இளம்பெண் உள்பட 3 பேர் மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2020-ம் ஆண்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலின்போது, இந்த வழக்கானது, ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான அரசியல் வாக்குவாதத்தில் ஈடுபட வழிவகை செய்தது.

தேர்தல் முடிந்ததும், குற்றவாளிகளின் குடும்பத்தினர் இளம்பெண்ணிடம் புகாரை வாபஸ் பெற கோரி நெருக்கடி கொடுத்தனர். ஆனால், இளம்பெண் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து இளம்பெண்ணிடம் புகாரை வாபஸ் பெற கோரி கூறினர்.

அதனை இளம்பெண் மற்றும் அவருடைய தாயார் மறுத்ததும், ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் இருவரையும் அடித்து, தாக்கியது. இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் 18 வயது சகோதரன் நிதின் அஹிர்வார் அவர்களை தடுக்க ஓடி சென்றுள்ளான். எனினும், வீடு புகுந்து தாக்கிய அந்த கும்பல் நிதினை அடித்து கொலை செய்தது.

அப்போது, கும்பலை தடுக்க முயன்ற இந்த இளம்பெண்ணும் கடுமையாக தாக்கப்பட்டார். மகனை பாதுகாக்க ஓடிய அந்த இளம்பெண்ணின் தாயாரையும், கும்பல் கடுமையாக தாக்கியதுடன் அவருடைய ஆடைகளை கிழித்து, நிர்வாணப்படுத்தியது. இந்த சம்பவத்தில், விக்ரம் தாக்குர், விஜய் தாக்குர், ஆசாத் தாக்குர், கோமல் தாக்குர், லாலு கான், இஸ்லாம் கான், கோலு சோனி, நபிஸ் கான் மற்றும் வஹீத் கான் ஆகிய 9 பேருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவானது.

2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மற்றொரு நீண்டகால சட்ட போராட்டம் தொடங்கியது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இளம்பெண்ணின் மாமாவை பப்பு ரஜக் என்பவர் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். குற்றவாளிகள் வழக்கை தீர்க்க விரும்புகின்றனர் என கூறியுள்ளார். நிதின் படுகொலையில் சாட்சிகளில் ஒருவரான இளம்பெண்ணின் மாமாவிடம், அவர் அளித்த வாக்குமூலங்களை வாபஸ் பெறும்படி கூறப்பட்டு உள்ளது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதில், இரண்டு பேருக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி இளம்பெண்ணின் மாமா உயிரிழந்து விட்டார். பப்புவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அவருடைய குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ஆசிக் குரேஷி, பப்லு பீனா, இஸ்ரேல் பீனா, பஹீம் கான் மற்றும் தன்டு குரேஷி ஆகிய 5 பேருக்கு எதிராக கொலை வழக்கு பதிவானது. அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், இதனுடன் சம்பவம் முடியவில்லை. இளம்பெண்ணின் மாமாவின் உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி கொண்டு நேற்று மாலை வீட்டுக்கு சென்றனர். அப்போது, வேனில் இருந்த அந்த இளம்பெண் துக்கத்துடன் அழுதபடி இருந்துள்ளார். வீடு வருவதற்கு 20 கி.மீ. தொலைவு இருக்கும்போது, திடீரென வேனின் கதவை திறந்து வெளியே குதித்து விட்டார். இதில், படுகாயமடைந்த அந்த இளம்பெண் உயிரிழந்து விட்டார். இதுபற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு லோகேஷ் சின்ஹா கூறும்போது, இரு தரப்பினர் மோதலில் படுகாயமடைந்த இளம்பெண்ணின் மாமா உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இதன்பின் இறுதி சடங்கிற்கான வேனில் இருந்து குதித்து இளம்பெண் மரணம் அடைந்து விட்டார். விசாரணைக்கு பின்னரே அனைத்து உண்மைகளும் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இளம்பெண்ணின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மோடி அரசின் செயல்பாட்டை விமர்சித்து பேசியுள்ளனர்.

குடும்பத்திற்கு நெருக்கடி அளித்ததுபற்றி போலீசில் இளம்பெண் எச்சரித்து இருந்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோன்று, மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி, இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வழக்கின் பின்னணி விவரம்:

2020-ம் ஆண்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலின்போது, இந்த வழக்கானது, ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான அரசியல் வாக்குவாதத்தில் ஈடுபட வழிவகை செய்தது.

தேர்தல் முடிந்ததும், குற்றவாளிகளின் குடும்பத்தினர் இளம்பெண்ணிடம் புகாரை வாபஸ் பெற கோரி நெருக்கடி கொடுத்தனர். ஆனால், இளம்பெண் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து இளம்பெண்ணிடம் புகாரை வாபஸ் பெற கோரி கூறினர்.

அதனை இளம்பெண் மற்றும் அவருடைய தாயார் மறுத்ததும், ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் இருவரையும் அடித்து, தாக்கியது. இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் 18 வயது சகோதரன் நிதின் அஹிர்வார் அவர்களை தடுக்க ஓடி சென்றுள்ளான். எனினும், வீடு புகுந்து தாக்கிய அந்த கும்பல் நிதினை அடித்து கொலை செய்தது.

அப்போது, கும்பலை தடுக்க முயன்ற இந்த இளம்பெண்ணும் கடுமையாக தாக்கப்பட்டார். மகனை பாதுகாக்க ஓடிய அந்த இளம்பெண்ணின் தாயாரையும், கும்பல் கடுமையாக தாக்கியதுடன் அவருடைய ஆடைகளை கிழித்து, நிர்வாணப்படுத்தியது. இந்த சம்பவத்தில், விக்ரம் தாக்குர், விஜய் தாக்குர், ஆசாத் தாக்குர், கோமல் தாக்குர், லாலு கான், இஸ்லாம் கான், கோலு சோனி, நபிஸ் கான் மற்றும் வஹீத் கான் ஆகிய 9 பேருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவானது.

2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மற்றொரு நீண்டகால சட்ட போராட்டம் தொடங்கியது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இளம்பெண்ணின் மாமாவை பப்பு ரஜக் என்பவர் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். குற்றவாளிகள் வழக்கை தீர்க்க விரும்புகின்றனர் என கூறியுள்ளார். நிதின் படுகொலையில் சாட்சிகளில் ஒருவரான இளம்பெண்ணின் மாமாவிடம், அவர் அளித்த வாக்குமூலங்களை வாபஸ் பெறும்படி கூறப்பட்டு உள்ளது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதில், இரண்டு பேருக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி இளம்பெண்ணின் மாமா உயிரிழந்து விட்டார். பப்புவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அவருடைய குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ஆசிக் குரேஷி, பப்லு பீனா, இஸ்ரேல் பீனா, பஹீம் கான் மற்றும் தன்டு குரேஷி ஆகிய 5 பேருக்கு எதிராக கொலை வழக்கு பதிவானது. அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், இதனுடன் சம்பவம் முடியவில்லை. இளம்பெண்ணின் மாமாவின் உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி கொண்டு நேற்று மாலை வீட்டுக்கு சென்றனர். அப்போது, வேனில் இருந்த அந்த இளம்பெண் துக்கத்துடன் அழுதபடி இருந்துள்ளார். வீடு வருவதற்கு 20 கி.மீ. தொலைவு இருக்கும்போது, திடீரென வேனின் கதவை திறந்து வெளியே குதித்து விட்டார். இதில், படுகாயமடைந்த அந்த இளம்பெண் உயிரிழந்து விட்டார். இதுபற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு லோகேஷ் சின்ஹா கூறும்போது, இரு தரப்பினர் மோதலில் படுகாயமடைந்த இளம்பெண்ணின் மாமா உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இதன்பின் இறுதி சடங்கிற்கான வேனில் இருந்து குதித்து இளம்பெண் மரணம் அடைந்து விட்டார். விசாரணைக்கு பின்னரே அனைத்து உண்மைகளும் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இளம்பெண்ணின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மோடி அரசின் செயல்பாட்டை விமர்சித்து பேசியுள்ளனர்.

குடும்பத்திற்கு நெருக்கடி அளித்ததுபற்றி போலீசில் இளம்பெண் எச்சரித்து இருந்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோன்று, மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி, இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Next Story