திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்: அம்மாவை அடித்துக் கொன்ற மகன்


திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்: அம்மாவை அடித்துக் கொன்ற மகன்
x

கோப்புப்படம்

தெலுங்கானாவில் பொருத்தமான பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தவறிய அம்மாவை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டத்தில் பொருத்தமான பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தவறிய அம்மாவை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்டா மைலாரம் கிராமத்தில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 45 வயதான அந்த பெண்ணை அவரது மகன், உறவினர் ஒருவருடன் இணைந்து செங்கலால் அடித்து கொன்றுள்ளார். பின்னர் போலீசாரை குழப்புவதற்காக கழுத்தை அறுத்து கால்களை வெட்டியுள்ளனர்.

அந்தப் பெண்ணின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.


Next Story