மராட்டியத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது


மராட்டியத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது
x

இரண்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவுரங்காபாத்,

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் இரண்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சதாரா காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story