மராட்டியம்: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி


மராட்டியம்: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி
x

மராட்டியத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மும்பை,

சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டம் கட்ரங்கட்டா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து சுதாரித்துக்கொண்ட போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த பதிலடி தாக்குதலில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில், 2 பெண் நக்சலைட்டுகளும் அடக்கம். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story