மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டியது
மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதன்படி, மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 9,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,61,404 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 141 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,21,945 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,353 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,19,901 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை மாநிலத்தில் 1,16,364 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story