இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 603 ஆக உயர்வு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் வேகம் இன்னும் குறைந்தபாடில்லை.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1329 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18601-ல் இருந்து 18985 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 603 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3260 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story