வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ 10,000 - கேரள அரசு
![வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ 10,000 - கேரள அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ 10,000 - கேரள அரசு](https://img.dailythanthi.com/Articles/2018/Aug/201808251659140378_Kerala-Government-announced-10000-for-the-flood-victims-as_SECVPF.gif)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ. 10,000 கேரள அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods2018
திருவனந்தபுரம்
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் விவரங்களை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்படி முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். கேரள அரசின் இணையதளத்தின் மூலம், விண்ணப்பித்து அதில் சேத விவரங்களை இணைக்கும்படி அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே வெள்ளதால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வங்கிகணக்கிலும் தலா ரூ.10,000 செலுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரள அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக 10,000 ரூபாவை அறிவித்தது, 14 மாவட்டங்களில் இருந்து 3,91,494 குடும்பங்கள் பயனடைவார்கள்.
மறுசீரமைப்பு பணிகள் பற்றிய புதுப்பிப்புகள்: 1,31,683 வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன, இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் 31 சதவீதமாகும். இதில் 23.36 லட்சம் இணைப்புகளுக்கு மின்சாரம் மீட்டமைக்கப்பட்டுள்ளது. 25.6 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,314 டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டு (16158 பாதிக்கப்பட்டு உள்ளது) இப்போது செயல்பட்டு வருகின்றன.
Kerala Government announced ₹10,000 for the flood victims as relief, CMDRF will contribute ₹6200 to this sum and SDMA will share the remaining ₹3800. 391494 families from 14 districts will benefit. #CMDRFimpactpic.twitter.com/CB0UgmhYQC
— CMO Kerala (@CMOKerala) August 25, 2018
Updates on restoration works: 1,31,683 houses have been cleaned, which is 31% of the total flood-hit houses. Electricity has been restored for 23.36 lakh connections of the 25.6 lakh disrupted.14,314 transformers (out of 16158 affected) are now functioning. #KeralaFloodRelief
— CMO Kerala (@CMOKerala) August 25, 2018
Related Tags :
Next Story