ஊழல் வழக்குகள் விசாரணை பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சாமி கடிதம்


ஊழல் வழக்குகள் விசாரணை பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சாமி கடிதம்
x
தினத்தந்தி 22 Oct 2017 11:15 PM (Updated: 22 Oct 2017 9:19 PM)
t-max-icont-min-icon

பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எம்.பி. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

புதுடெல்லி,

உங்களது ஊழலுக்கு எதிரான போர் பற்றிய உறுதிமொழிக்கும், குறிப்பாக உயர்மட்டத்தில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து வழக்கு பதிவு செய்தமைக்காகவும் நாடு பெருமை கொள்கிறது. அதேசமயம் இந்த வழக்குகள் விசாரணையில் மிதமிஞ்சிய தாமதம் ஏற்படுவதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். குறிப்பாக ஏர்செல்–மேக்சிஸ், சாரதா சீட்டு கம்பெனி, ராபர்ட் வதேரா நில முறைகேடு போன்ற வழக்குகள் தாமதமாகின்றன. சி.பி.ஐ.யால் முதல்கட்டமாக ஊழல் நிரூபிக்கப்பட்ட வழக்குகளின் விசாரணையை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story