நல்ல பழக்கங்கள், ஒழுக்கத்தை நான் முத்துராமனிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன்: ரஜினிகாந்த்
நல்ல பழக்கங்கள், ஒழுக்கத்தை நான் முத்துராமனிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இன்று சந்தித்தார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
*நான் நல்ல பழக்கத்தை கற்றுக்கொண்டதே முத்துராமன் அவர்களிடம் இருந்து தான்.
* ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், நல்ல படத்தை கொடுப்பேன்
* 1996-ல் நான் ஆதரித்த கூட்டணியை வெற்றி பெற செய்தீர்கள்
*நான் நாளை எப்படி ஆக வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிப்பார்
*தவறான பழக்கங்களை ரசிகர்கள் கைவிட வேண்டும்.
*அடுத்த படத்தை வரும் 20 ஆம் தேதி தொடங்க இருக்கிறோம்.
*தீர யோசித்தே நான் எந்த விஷயத்தையும் செய்வேன்
*ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். நல்ல படத்தை கொடுப்பேன்.
*1996-ல் நான் ஆதரித்த கூட்டணியை வெற்றி பெற செய்தீர்கள்.
*அரசியல் மூலம் பணம் சம்பாதிப்பதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக இயக்குநர் முத்துராமன் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-
*கேமராவுக்கு முன் மட்டுமே நடிப்பவர் நடிகர் ரஜினி.
* ரஜினியின் நடிப்பு வேகமானது, அழகானது
* புகழை தலைக்கு கொண்டு செல்லாதவர் ரஜினிகாந்த்
* உள்ளத்தால் பொய் இல்லாத மனிதர் ரஜினி
* ரஜினியின் அடுத்த படம் தலைவர் 164. இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story