வலைத்தள அவதூறுக்கு ஷாருக்கான் பதில்


வலைத்தள அவதூறுக்கு ஷாருக்கான் பதில்
x

தன்னை பற்றி சமூகவலைத்தளத்தில் வரும் அவதூறுகளுக்கு நடிகர் ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.

ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள 'பதான்' படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். அதில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து ஷாருக்கானுடன் கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார். இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. பாடல் காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இல்லையேல் பதான் படத்தை மத்திய பிரதேசத்தில் திரையிட அனுமதி வழங்குவதா? வேண்டாமா? என்று யோசிப்போம் என்றும் அங்குள்ள மந்திரி நரோத்தம் மிஸ்ரா எச்சரித்து உள்ளார். வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தூரில் ஷாருக்கான், தீபிகா படுகோனே கொடும்பாவியை எரித்தனர். வலைத்தளங்களிலும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஷாருக்கான் கூறும்போது, ''சமூக வலைத்தளங்கள் பிற்போக்குத்தனமாக இயங்குகின்றன. மோசமான கருத்துகளை வெளியிடுகிறார்கள். என்னை சுற்றி பல விஷயங்கள் நடக்கின்றன. ஆனாலும் நான் நேர்மறையாகவே இருப்பேன். எனக்கு எதிராக வரும் கருத்துகள் என்னை பாதிப்பது இல்லை" என்றார்.


Next Story