நானி நடித்துள்ள 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு


நானி நடித்துள்ள சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
x

நானி நடிப்பில் உருவாகி இருக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலை விரைவில் படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான 'தசரா' கலவையான விமர்சனங்களை பெற்றன.


நானியின் 30-வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதால் இந்தக்கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


விவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'சரிபோத சனிவாரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஏற்கனவே கேங்ஸ்டர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முரளி ஜி. ஒளிப்பதிவு. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைதொடர்ந்து, உல்லாசம் என தொடங்கும் அடுத்த பாடலும் வருகிற 13-ந் தேதி வெளியாகும் என்ற தகவலை படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.


Next Story