எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா - கமல்ஹாசன் டுவீட்!


எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா   - கமல்ஹாசன் டுவீட்!
x
தினத்தந்தி 4 Jun 2023 10:39 AM GMT (Updated: 4 Jun 2023 11:12 AM GMT)

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மண்ணுலகை விட்டு நீங்கிய பிறகு அவரது பாடல்கள் இன்னும் மக்களின் மனதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.

சென்னை,

இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் இன்று (ஜூன் 4). கோடான கோடி இசை ரசிகர்களின் மனங்களிலிருந்து நீங்கவே முடியாத அந்தப் பெரும் பாடகன் இந்த மண்ணுலகை விட்டு நீங்கிய பிறகும் அவரது பாடல்கள் இன்னும் மக்களின் மனதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.

குரலாலும் நடிப்பாலும் பண்புகளாலும் கோடிக் கணக்கான மனிதர்களைக் கவர்ந்த எஸ்பிபி தன் பாடல்களாலும் நடித்த திரைப்படங்களாலும் மட்டுமல்லாமல் பெருமதிப்புக்குரிய மனிதராகவும் என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

இந்தநிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,

இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து என பதிவிட்டுள்ளார்


Next Story