பிக் பாஸ் ஆரவைத்தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமாகும் பிக் பாஸ் ராஜு


பிக் பாஸ் ஆரவைத்தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமாகும் பிக் பாஸ் ராஜு
x

’பன் பட்டர் ஜாம்' படத்தின் மூலம் பிக் பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

சென்னை,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் புகழ் பெற வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில், பிக் பாஸ் சீசன் 1-ல் வெற்றிப்பெற்ற ஆரவ் தற்போது பல படங்களில் நாயகனாகவும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரைத்தொடர்ந்து, தற்போது இன்னொரு பிக் பாஸ் வெற்றியாளர் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன். இவர் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்திற்கு 'பன் பட்டர் ஜாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

'காலங்களில் அவள் வசந்தம்' படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இந்த படத்தை இயக்குகிறார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கின்றனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. தற்போது இந்தப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

.


Next Story