இத்தாலியில் ஒரு வீட்டின் விலை 90 ரூபாய்!


இத்தாலியில் ஒரு வீட்டின் விலை 90 ரூபாய்!
x

இத்தாலி பூர்வகுடிகள் பல்வேறு நகரங்களில் குடியேறி விட்டனர். வீட்டை விட்டுச் சென்றவர்கள் இப்போது வீடு எப்படியிருக்கிறது என்று பார்க்கக்கூட வருவதில்லை.

விற்பனை தொகைதான் 6 யூரோக்கள், மற்றபடி வாங்கிய வீட்டை நிச்சயம் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் யூரோக்கள் செலவழித்து புதுப்பிக்க வேண்டுமாம். மேலும் நீங்கள், வைப்பு தொகையாக 5 ஆயிரம் யூரோக்களையும் கட்டவேண்டும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கனவு தனக்காக ஒரு சொந்த வீடு. அதுவும் அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் வீடு வாங்கி அந்த நாட்டின் குடிமகனாக குடியேற வேண்டும் என்பது பலரது கனவு மட்டுமல்ல; வாழ்வின் லட்சியம் கூட. இந்நிலையில் இத்தாலியின் சிசிலியில் உள்ளது, சம்பூகா என்ற சிற்றூர். மிகவும் அழகான ஊர் இது.

இருந்தாலும் அந்த ஊரில் பல வருடங்களாக வசித்துவந்த பூர்வகுடிகள் வீட்டை காலி செய்துவிட்டு இத்தாலியின் பல்வேறு நகரங்களில் குடியேறி விட்டனர். அதனால் அந்த ஊரில் மக்கள் தொகையில் பெரும் சரிவு ஏற்பட்டுவிட்டது. ஆளில்லாமல், சரியாக கவனிக்கப்படாததால் பல வீடுகள் இடியும் நிலையில் உள்ளன. வீட்டை விட்டுச் சென்றவர்கள் இப்போது வீடு எப்படியிருக்கிறது என்று பார்க்கக்கூட வருவதில்லை. ஊரின் பாதிப்பகுதி பாழடைந்த இடமாக மாறிவிட்டது.

ஊரையும் வீட்டையும் காப்பாற்றவும், மக்கள் தொகையை அதிகப்படுத்தவும் இத்தாலி அரசு அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்தது. ஆம், சம்பூகாவில் உள்ள ஒரு வீட்டின் விலை வெறும் ஒரு யூரோ மட்டுமே. அதாவது இந்திய மதிப்பில் 90 ரூபாய். 2019-ல், வெளியான அறிவிப்பு, இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. பெரிய நகரம் என்பதால், பாதி வீடுகள் படுஜோராக விற்ற பிறகும், இன்னும் சில வீடுகள் விற்காமல் இருக்கின்றன. அதை அடுத்ததாக, 2 யூரோவிற்கு விற்க தயாராகினர். அந்தவகையில், இப்போது சம்பூகா நகரின் வீடுகள் 6 யூரோவிற்கு விற்பனையாகின்றன.

விற்பனை தொகைதான் 6 யூரோக்கள், மற்றபடி வாங்கிய வீட்டை நிச்சயம் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் யூரோக்கள் செலவழித்து புதுப்பிக்க வேண்டுமாம். மேலும் நீங்கள், வைப்பு தொகையாக 5 ஆயிரம் யூரோக்களையும் கட்டவேண்டும். அந்தவகையில், எப்படியும் செலவு நீண்டுவிடும். அப்படி இருந்தும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்ற கலைஞர்கள் இந்த வீடுகளை வாங்க அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அவர்களுக்குப் பிடித்த இடமாகவும் இது இருக்கிறதாம். தவிர, இங்கு வீட்டை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர் என்பது ஹைலைட். ''இன்னும் ஆறு வருடங்களில் மனிதர்கள் யாருமற்ற சம்பூகா வீடுகள் எல்லாம் குடும்பங்களால் நிறைந்திருக்கும்...'' என்கிறார் சம்பூகாவின் மேயர் லியோனார்டோ.


Next Story