இரவு 7 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?


இரவு 7 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
x

கோப்புப்படம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேனி, நீலகிரி, ஈரோடு. வேலூர், கோவை, திருப்பூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருவள்ளூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story