8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம்

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகையில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story