இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (02.09.2024) மற்றும் நாளை (03.09.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவள்ளூர், நீலகிரி, கோவை, வேலூர், தென்காசி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், திருச்சி, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியிலும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story