பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர் லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்


பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர் லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : AFP 

ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறியுள்ளார்.

பாரீஸ்,

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென்னும், மற்றொரு இந்திய வீரர் பிரனாயும் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென் 21-12, 21-6 என்ற புள்ளிக்கணக்கில் பிரனாயை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதியில் தைவான் வீரர் சவ் டியன் சென்னுடன் லக்சயா சென் மோத உள்ளார்.


Next Story