பாரீஸ் ஒலிம்பிக்: ஆக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்


பாரீஸ் ஒலிம்பிக்: ஆக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி போட்டியின் காலிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

வழக்கமான ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. இந்தியா தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 1 கோல் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் மார்ட்டோன் லீ ஒரு கோல் அடித்தார்.

இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. சூட் அவுட்டில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.


Next Story