மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு


மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
x

image courtesy: twitter/@ACCMedia1

தினத்தந்தி 19 July 2024 1:05 PM GMT (Updated: 19 July 2024 1:29 PM GMT)

9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடங்கியது.

தம்புல்லா,

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் உள்ள தம்புல்லாவில் இன்று முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் நேபாளம் - ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) அணிகள் மோதின. இதில் நேபாளம் வெற்றி பெற்றது.

இதனையடுத்து நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.


Next Story