சர்வதேச கிரிக்கெட்டில் 4-வது வீரராக விராட் கோலி படைக்க உள்ள மாபெரும் சாதனை


சர்வதேச கிரிக்கெட்டில் 4-வது வீரராக விராட் கோலி படைக்க உள்ள மாபெரும் சாதனை
x
தினத்தந்தி 16 Sep 2024 8:55 AM GMT (Updated: 16 Sep 2024 8:59 AM GMT)

எதிர்வரும் வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் விராட் கோலி இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 4-வது வீரராக மாபெரும் சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 591 இன்னிங்ஸ்களில் விளையாடி 26942 ரன்கள் குவித்துள்ளார். இவர் இந்த தொடரில் 58 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 27,000 ரன்கள் குவித்த 4வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார்.

இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கரா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் உள்ளனர்.


Next Story