பயிற்சியின்போதே அதிரடி... சிக்சர் அடித்து சென்னை மைதானத்தின் சுவரை உடைத்த விராட் கோலி


பயிற்சியின்போதே அதிரடி... சிக்சர் அடித்து சென்னை மைதானத்தின் சுவரை உடைத்த விராட் கோலி
x
தினத்தந்தி 16 Sep 2024 10:50 AM GMT (Updated: 16 Sep 2024 12:01 PM GMT)

இந்திய வீரர்கள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் வங்காளதேசத்தை தோற்கடித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய அணியினர் தயாராகி வருகிறார்கள். அதனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில நாட்களாக கடினமான பயிற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த பயிற்சியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இணைந்து பயிற்சிகளை எடுத்து வருகிறார்.

அதில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற்ற 2வது நாள் பயிற்சியில் விராட் கோலி ஒரு அதிரடியான சிக்சரை அடித்துள்ளார். பறந்து சென்ற அந்த பந்து சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இந்திய அணியின் உடைமாற்றும் அறைக்கு அருகில் உள்ள சுவரை உடைத்துள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story